Wednesday 22 October 2014

இது காதலா?

நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துகொண்டுயிருக்கிறேன் என் பள்ளியில் ஒரு சம்பவம்:


       வெளியில் இருந்து பார்பதற்க்கு பிரம்மன்டம்மாக இருகும் எங்கள் பள்ளியின் உள்ளே நுழைந்த போது என்னுள்   ஹாரிபாட்டர் ஹாக்குவர்ட்ஸ் ஸ்கூலில் நுழைந்தது போல மிகவும் பெருமிதமாக இருந்தது.

ஆனால் நுழைந்து ஓரிரு மாதங்களில் அதன் பிரமாண்டம் தந்த ஆச்சரியம் அனைத்தும் அற்பமாய் மாறிப்போனது.

(இந்த நேரத்தில் நான் என்னைப்பற்றிச் சில விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும்

நான் தமிழ் கலாசாரம், பண்பு...போன்ற சில  ஏற்றுக் கொள்ளக் கூடிய பழமையான பழக்கங்களோடு வளர்ந்தேன். எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டியும் இல்லை...புத்தகம் புத்தகம் மட்டுமே எங்கள் பொழுதும் ...போக்கும்).

என்னுடைய பழைய பள்ளியின் தலைமைஆசிரியர்(முதல்வர்) நிறையக் கட்டுப்பாடுகளுடன் மிகவும் கண்டிப்போடு கூடிய கண்ணியத்துடனும் பள்ளியை நிர்வகித்து வந்ததால்...தவறுகள் ...சில சமயம் குறைக்கப்பட்டும் பல சமயங்கள் மறைக்கப்பட்டும் இருந்தன. அவற்றை ஆராயும் நோக்கு எனக்கு இல்லாததா;ல் அவற்றைப்பற்றி சரியாகத் தெரியாது.

ஆனால் இங்கு அந்த கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி மேற்கத்திய கலாசாரத்தோடு ஒட்டிப்பிறந்தவர்கள் போல் இயங்கி வந்தனர். மாணவர்கள் அடிக்கும் கூத்து தாங்க முடியாது. ஆசிரியர்களுக்கு கோபம் ஏற்பட்ட போதும் பள்ளி நிர்வாகத்திற்கும் அவர்கள் தரும் சொற்ப கூலியும் போய்விடக்கூடாதே என்ற அச்சத்திலும் யாரையும், எதற்கும் கண்டிப்பதில்லை.

(எங்கள் பள்ளியின் முக்கியமான விதி மாணவர்களை அடிக்கவோ திட்டவோ கூடாது). ஆனால் பெற்றோர்களிடம் மட்டும் வாய் கிழியக் கிழிய வியாக்கியானம் பண்ணுவார்கள்.

மாணவர்கள் ஒரு பக்கம் என்றால் மாணவிகள் அடிக்கும் கூத்தைஎன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை

ஆண், பெண் நட்பு சரியானது தான் என்று பலர் வாதிடக் கேட்டிருக்கிறேன். எனக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு. ஆனால் இங்கு வந்த பிறகு அதனை ஏற்கும் மனநிலை சுத்தமாகப் பறி போய் விட்டது.

ஏனெனில் அவர்கள் கை கோர்த்துக் கொண்டு சுற்றுவதும், வகுப்பில் ஆசிரியர்கள் இருந்தாலும் இல்லாதது போலவே பாவித்து அவர்கள் அடிக்கும் கூத்தையும் , இதயத்தில் அம்பு விடும் குறியீடோடு அவர்கள் பரிமாறிக் கொள்ளும் பிறந்த நாள் பரிசுகளையும், பிப்ரவரி 14 அன்று பள்ளி படும் பாட்டையும் பார்த்தால் யாருக்குத்தான் ஆண், பெண் நட்பு சரியெனத் தோன்றும்?

என் அம்மாவும் கூட சூடத்தில் சத்தியம் அடித்துச் சொன்னால் கூட நம்ப மாட்டார் போல.

இந்த வயதில் வரும் உணர்வுகள் காதலாக இருக்குமா? இது இவர்களுக்குப் புரியுமா? இதற்கு யார் காரணம்? ?

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதெல்லாம் எதற்கோ? என்ற வேதனை என்னை துளைத்து எடுக்கிறது.

ஆனால் நானும்  இப்போது கண்டும் காணாமல் வலம் வருகிறேன். எனது பிரமாண்ட மான(?!) பள்ளியில்.



   

No comments:

Post a Comment